தலையரங்கம்
வணக்கம்,சித்த யோகி தலையரங்கம் பக்கதிருக்கு உங்களை வரவேற்க்கிறோம்
(Welcome to our homepage)
நான் பார்த்தவற்றில் இன்றைய உலகில் ஆன்மிக, சித்த கல்வியை போதிக்க பல நிறுவனங்கள் நாளொரு மேனியாக தோன்றி மக்களிடம் தன்னுடைய வருவாயை பெருகி கொள்ள முயன்று வருகின்றன.
இதில் ஆன்மிக கல்வி தருவதாக மக்களிடம் பொய்யான தேர்தல் வாக்குறுதி போல, பொய்யை சொல்லி மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.
காதலையும் ஆன்மிகத்தையும் உணரத்தான் முடியும்.
யாரும் பணத்திக்காக உணர்த்த முடியாது.
“ பாரப்பா நால்வேதம் நாலுபாரு
பற்றாசை வைப்பதற்கோ பினையோகோடி
வீரப்பா ஒன்றொன்றுக் கொன்றைமாறி
வீணிலே யவர்பிழைக்க செய்தமார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார்காணார்
ஆரப்பா நிலைநிற்கப் போறாரையா
ஆச்சரியங் கோடியிலே ஒருவன்தானே”
பல இனையத்தளங்களில் சித்தர் பாடல் முதல் மருத்துவ குறிப்புக்களை பதிவிடும் பலரும் எதையும் செய்து காட்டுவதில்லை, யாதேனும் புத்தகத்தில் இருக்கும் விடயத்தை தங்களது என்று இனையத்தில் பதிவிடுவது மட்டுமே அவர்களால் முடிகிறது.
“மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்
மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு
சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்
சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்”
- அகத்தியர் ஞானச்சுருக்கம்
வித்தை காட்டுபவ்ர்கள் தான் நான் தண்ணீரினுள் இருப்பேன். அப்படி செய்வேன் இதை செய்வேன் என பொய்களை அவிழ்த்து விடுவர். மடையன் தான் அவன்! ஏனெனில் ஒரு எருமை மாடு கூட தண்ணீரினுள் இருக்கும்! அவன் யோகியல்ல!
அதுமட்டுமா? தாடி சடை வளர்த்து உத்திராட்சம் அணிந்து காவி உடுத்தி பெரியசாமி என்று தன்னை தம்பட்டமடிக்கும் எவனும் உண்மையான் சாமி அல்ல! மூவாசையை முற்றும் துறந்தவனே, சாமி – யார்? என தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுபவனே, அத்ற்காக ஞான தவ்ம் செய்பவனே சாமியார்! ஆத்மசாதகன்! தவசீலன்!
காஷாயம் தரித்து கண்ணை மூடி எவன் எதை செய்தாலும் அதுவும் ஞானமல்ல! தவமல்ல! கண்ணை மூடினாலே தவ்று!? அவன் கண்ணை மூடிட்டான் என செத்தவனைத்தானே சொல்வோம்? கண்ணை மூடி நீ எதை செய்தாலும் நீயும் செத்துதான் போவாய்!? சந்தேகமேயில்லை!
“கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலை என கொண்டாடும் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக” என் திருவருட்பிரகாசவள்ளலார் தெளிவாக கூறுகிறார்! இங்கே இந்த பாடலில் அகத்தியரும் கூறுகிறார்.“கண்ணை மூடி சாம்பவியென்று உரைப்பார் தவமில்லர்கள்” என்றே!?
துறவு புக்கித் துரிதமுடன் தூது வைத்துத்
தோகையரைப் புல்லுதற்காய்த் தூளி தங்கள்
பரப்பியந்திர மேலிட்டுத் தபசியைப் போல்
பாசாங்கு செய்து பக்கம் பார்த்து நின்று
புறங்காட்டி பூவையரைப் புல்வோர் பேயர்
பூரணத்தி ணியல்பென்ன வென்று கேட்டால்
மறம் பூண்டு வாயில் வந்த படியாய்ப் பேசி
மாந்தர்களை மயங்கிடுவர் முத்திக்கே காரே — கோரக்கர் சந்திரரேகை 200
துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார். பூரணம் என்றால் என்ன என்று கேட்டால் வாயில் வந்தபடியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி மயக்கிடுவார்களாம்.
இவ்வாறு கோரக்கர் பல்லாயிரம் அண்டுகளுக்கு முன்னரே போலி சாமியார்களை பற்றி கூறிவிட்டார்.
இப்போதும், பல சாமியார்களும் தியானம் சொல்லித்தாரேன்! சாம்பவி முத்திரை யோகா என்றெல்லாம் விளம்பரம் செய்து அப்பாவிகளை கூட்டி வைத்து கண்ணை மூடு அதை செய் அப்படி நினை என என்ன்வெல்லாமோ கூறுகிறார்கள்! ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் அவர்களுக்கும் ஞானம் என்றால் என்னவென்றே தெரியாது!
இவ்வாறான போலித்தன்மையை மாற்றி சரியான ஞானம் இது தான் என்பதை சிலருக்காவது புரிய வைக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள்.
வாசியறிய காசு வேணுமாம் !. அந்தோ !
அவன் வாசியும் அறியான் . ஈசன் எந்தன் இணையடி தூசியும் அறியான் !
பேசியே பகட்டிடுவான் .
பாழ்நரகில் வீழ்வதற்கே !
ஊசிபோகா உள்துளை அறிவானோ ?
இடகலை என்பான் , வடகலை என்பான் .
ஓர் கலை அறிவானோ ?
இரேசகம் என்பான் , பூரகம் என்பான் .
கும்பகம் அறிவானோ ?
சூரியன் என்பான் , சந்திரன் என்பான் .
அக்னி அறிவானோ ?
சாகா கலை இது என கற்றுதந்த அந்த
" ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் "
எங்கே என கேட்டால் .
இறந்தாண்டொன்று ஆகிறது என்பார்கள் அவர் தொட்ட சீடர்கள் .
ஆன்மீகம் என்பது மிகப் பெரிய விஞ்(மெய்)ஞானம் அதை நிரூபித்து காட்ட இயலாதவர்கள் விஞ்(மெய்)ஞானியாக இருக்க முடியாது ஆனால் இன்று இதுவே போலிகளுக்கு ஆதாரமாகி விட்டது. ஆன்மீகம் புரியாத விஷயம் என்று கூறியே அதை வியாபாரமாக்கி விட்டார்கள்.
ஆன்மீகத்தை (இறை நிலை(வனை)) உணர முடியும், உண்மையான சித்த கல்வியை மக்களுக்கு முடித்தவரை உணர்த்தி விட்டால் அதுவே போதும் ,
By Sivasakthivel M.D (E.H)
Powered by Siddha Yogi website team
(last update 9.9.2018)
Created By Sakthi System Service